Tuesday, February 5, 2013

மழலைகளின் கையசைப்பில்

 
 
 
 
மழலை மொழியறியாது
மகிழ்வோடு பழகின...
பொம்மைகள் !

மழலைகளின் கையசைப்பில்
மண்டிக்கிடந்தது....
மனிதநேயம்!

இறைவனின் பங்களிப்பாய்
இல்லங்களில் மலர்ந்திருந்தது
மழலை மொழி !

நடைவண்டிக்கு
தெரிந்திருந்தது....
குழந்தை வளர்ப்பு!

ஒரு மரப்பாச்சியின்
முதல் கனவு...
மழலைக்கு தாயானது!



........கா.ந.கல்யாணசுந்தரம்

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மிகவும் ரசிக்க வைத்தது...

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-4-part2.html) சென்று பார்க்கவும்... நன்றி...

ஜெயசரஸ்வதி.தி said...

வலைச்சரம் வாயிலாக கவிகளை வாசிக்க வந்தேன் ...!!!

அழகான ஹைகூக்கள் ...!!!

தொடர வாழ்த்துக்கள் ...!!!